News June 25, 2024

திருடுபோன 120 செல்போன்கள் மீட்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக திருடு போன 120 செல்போன்களை ராணிப்பேட்டை எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீசார் மீட்டு அதை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி கிரண்ஸ்ருதி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

Similar News

News November 6, 2025

ராணிப்பேட்டை பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.06) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக காவல்துறையால் பெண்கள் பாதுகாப்பிற்காகவும், உடனை புகார் அளிக்கவும் உருவாக்கப்பட்ட காவல் உதவி கைபேசி செயலி பதிவிறக்கம் செய்ய குறியீட்டினை ஸ்கேன் செய்யவும் என அறிவுறுத்தப்பட்டது. பின் செயலியை பதிவிறக்கம் செய்து இன்றைய உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள். என்று மாவட்ட காவல்துறை செய்தியில் வெளியிட்டுள்ளது.

News November 6, 2025

ராணிப்பேட்டை: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நவ.7ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். வேளாண் தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் இன்று (நவ.06) தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

ராணிப்பேட்டை: TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS!

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நேற்று (நவ.05) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். TNPSC Group II Mains தேர்வுகள் முந்தைய ஆண்டு வினாக்களின் கைப்பட எழுதிய மாதிரி விடைகள் மெய்நிகர் கற்றல் வலைதளத்தின் வாயிலாக கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்திட தேர்வாளர்கள், ttps://tamilnaducareerservices.tn.gov.in என்ற வலைத்தளத்தில் இப்போதே பதிவு செய்து பயனடையுமாறு, தெரிவித்துள்ளது.

error: Content is protected !!