News September 23, 2025
திருச்செந்தூர் வாலிபர் கொலை., 5 பேர் கைது

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த மணிகண்டன்(30) நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தோப்பூர் அருகே ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை தொடர்பாக திருச்செந்தூர் போலீசார் திருச்செந்தூரை சேர்ந்த நட்டார், கணேசன் மற்றும் 3 சிறார்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 23, 2025
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அதிரடி மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகவை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது அலுவல் ரீதியான மாற்றம் என்று உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி விரைவில் பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.
News September 23, 2025
தூத்துக்குடியில் அரசு ஒப்பந்த வேலை! உடனே APPLY

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவ துறை சார்ந்து 22 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய எழுதப்படிக்க தெரிந்தவர்கள், மருத்துவம் சார்ந்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <
News September 23, 2025
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதி தாமிரபரணி ஆற்றின் 50 வயது மதிக்கத்தக்க சிவப்பு நிற சேலை அணிந்த பெண் சடலம் நேற்று மீட்கபட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. தகவலறிந்து ஆத்தூர் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்பெண் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.