News April 25, 2025
திருச்செந்தூர் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூர், நடுநாலுமூலை கிணறு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வம் (25). கடந்த 2019-ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.நீதிபதி சுரேஷ், அருள்செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
Similar News
News April 24, 2025
குவாரி குத்தகை உரிமைத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், கல்குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் நேரடியாக மற்றும் தபால் மூலமாக விண்ணப்பங்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்த முறையை எளிமையாக்கும் வகையில் கடந்த 10ஆம் தேதி முதல் உரிமம் பெறுவோர் இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
News April 24, 2025
சுவையான தூத்துக்குடி மீன் பிரியாணி

தூத்துக்குடி மீன் பிரியாணிக்கு தனி சிறப்பு உள்ளது. இந்த பிரியாணியில், திருக்கை, கணவாய், பாறை அல்லது பிற கடல் மீன்களை பயன்படுத்தப்படுகின்றன. தூத்துக்குடி பகுதியின் தனித்துவமான மசாலா கலவைகளாலும், கடல் மீனின் சுவையாலும், மீன் பிரியாணி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. தூத்துக்குடி கடலோர பகுதிகளில் மீன் பிரியாணியை சுவைக்க முடியும். நீங்கள் சுவைத்துள்ளீர்களா? சுவைக்காத உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.
News April 24, 2025
முத்தமிழறிஞர் கலைஞர் மாவட்ட அளவிலான செம்மொழி நாள் விழா

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. பள்ளிக்கு – 09.05.2025 மற்றும் கல்லூரிக்கு – 10.5.2025 நடைபெற உள்ளது. முதல் 150 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7000 ரூபாய் , மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9442881369 இந்த எண்ணை அழைக்கவும்.