News April 1, 2025
திருச்செந்தூர் செல்லும் நெல்லை பக்தர்கள் கவனத்திற்கு

திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலில் பெருந்திட்டம் வளாகப் பணிகள் நடப்பதால் மார்ச் 31 முதல் பயணியர் விடுதி செல்லும் வழியில் உள்ள தற்காலிக வாகன நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே நெல்லை மக்கள் சரியான பாதையில் சென்று முருகனை தரிசிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Similar News
News April 2, 2025
குளத்தில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி பலி

செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் திவாகர் (வயது-17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள குளத்திற்கு இன்று நண்பர்களுடன் காலை குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 2, 2025
நெல்லைக்கு கன மழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (ஏப்.4) அன்று நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*
News April 2, 2025
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை கொடியேற்றம்

களக்காட்டில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 11 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இதில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், இரவில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.