News November 6, 2025

திருச்செந்தூர்: சரமாரியாக அடித்துக் கொலை

image

காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (53) என்பவர் குலசை காவடிபிறை தெருவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அவருடன் பணியாற்றி வந்த முகமது ஹசன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருடன் நடத்திய விசாரணையில் இருவரும் ஒன்றாக மது அருந்திய போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஹாலோ பிளாக் கல்லால் சரமாரியாக அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Similar News

News January 26, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News January 26, 2026

BREAKING: தூத்துக்குடி கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

image

தூத்துக்குடி கீதாஜீவன் நகர், ஜாகீர் உசேன் நகர் பகுதியைச் சேர்ந்த 9 பேர் இன்று தூத்துக்குடி மொட்டை கோபுரம் அருகே உள்ள கடலில் குளிக்க சென்றனர். இதில், திடீரென்று வீசிய பெரிய அலையில் சிக்கியதில் 6 பேர் உயிர்தப்பினார். நரேன் கார்த்திக் (12), திருமணி (12), முகேந்திரன் (12) ஆகிய 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 26, 2026

தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!