News May 6, 2024

திருச்செந்தூர் அரசு பள்ளி 100 % தேர்ச்சி

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் முதல் மதிப்பெண்ணாக 537 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

Similar News

News July 5, 2025

தூத்துக்குடியில் பெண் கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

image

வாழவல்லானை சேர்ந்த திருமால் மனைவி தனலட்சுமி. இவருக்கும் சோமசுந்தரம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனலட்சுமி சோமசுந்தரத்திடம் 11 பவுன் நகை, 2 லட்சம் கொடுத்துள்ளார். இதை திருப்பி கேட்டதால் கடந்த 2014ல் குலசேகரப்பட்டினத்தில் உள்ள தோட்டத்தில் சோமசுந்தரம், நண்பர் அருண்குமாரும் தனலட்சுமியை கொலை செய்தனர். இதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News July 5, 2025

தூத்துக்குடியில் புகார் எண் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் சார்பில் மாநகராட்சியில் புகார் அளிக்கபட்டது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுபடுத்தும் விதமாக கட்டணம் இல்லா தொலைபேசி 1800 2030401 என்ற எண்ணை மேயர் ஜெகன் அறிவித்துள்ளார்.

News July 5, 2025

சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்

image

சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் இந்து மகா சபை சார்பில் அறிவிக்கபட்ட போராட்டம் தொடர்பாக தாசில்தார் பொண்ணு லட்சுமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அரசூர் ஊராட்சியை முற்றுகையிடும் போராட்டம் தொடர்பாக சமாதானமாக பேசி முடிக்கபட்டது. இதனை அடுத்து போராட்டம் கைவிடபட்டது. இதில் இந்து மகா சபை நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!