News September 30, 2024
திருச்செந்தூரில் முதல் வந்தே பாரத்…?

மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை இணையமைச்சர் முருகனை தெற்கு மாவட்ட பாஜ., பொதுச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் திருச்செந்தூரில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், விழா நாட்களில் லட்ச கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே சென்னை-திருநெல்வேளி ‘வந்தே பாரத்’ ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க நடவடக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
Similar News
News September 13, 2025
தூத்துக்குடி: முன்னாள் எம்எல்ஏ மகனுக்கு சிறை தண்டனை

சாத்தான்குளத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நீலமேகவர்ணம் என்பவரின் மகன் கதிரவன் ஆதித்தன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நண்பரான முத்துசெல்வன் (45) என்பவரிடம் 7 பவுன் நகையை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து விசாரணை நடத்திய சாத்தான்குளம் நீதிமன்றம் கதிரவன் ஆதித்தனுக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது.
News September 13, 2025
தூத்துக்குடி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

தூத்துக்குடி மக்களே செப்.13ம் தேதி முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <
News September 13, 2025
மில்லர்புரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு – மேயர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம் பகுதியில் குடிநீர் குழாய் செல்லும் பாதையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், சுந்தரவேல்புரம் பகுதியில் பூங்கா அமைத்து தருமாறும் வந்த மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் உடனிருந்தார்.