News January 16, 2026
திருச்செந்தூரில் குத்திக் கொலை

திருச்செந்தூர் அருகே வீரராகவுபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை வாசன். தனியார் விடுதி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவருக்கும், இவரது எதிர்வீட்டைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவருக்கும் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கிராஜா கத்தியால் ஏழுமலை வாசனின் கழுத்தில் குத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 27, 2026
தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை

இராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குமார்(22). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு பந்தல்கள் போடும் வேலை செய்து வரும் நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News January 27, 2026
தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை

இராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குமார்(22). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு பந்தல்கள் போடும் வேலை செய்து வரும் நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News January 27, 2026
தூத்துக்குடியில் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் மின்னல் கொடி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட உணவு நிறுவனங்கள், கடைகள் என மொத்தம் 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


