News March 23, 2024

திருச்செங்கோட்டில் கடையை உடைத்து பணம் கொள்ளை

image

திருச்செங்கோட்டின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே, சங்ககிரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்லாஸ் ரெடிமேட் கடையிலும், ஸ்மார்ட் மொபைல் கடையிலும் கடையை உடைத்து கல்லாவில் இருந்த பணம் நேற்றிரவு திருடபட்டுள்ளது . சுமார் இரண்டு லட்ச ரூபாய் அளவில் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .சிசிடிவி காட்சிகளை வைத்து திருச்செங்கோடு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 7, 2026

நாமக்கல்: இனி அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: <>NSDL <<>>2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.in இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க!

News February 7, 2026

நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்ட பக்தர்கள்

image

நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்த புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தை மாத சனிக்கிழமையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டது . காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.

News February 7, 2026

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர்

image

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் அமைக்கும் பணிகள் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது . பணிகள் 6 மாதங்களில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!