News April 10, 2025
திருச்செங்கோடு அருகே விபத்து!

திருச்செங்கோடு மலையடிவார பாதை வேலுசாமி மண்டபம் அருகே நேற்று கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
மருத்துவ மாணவி கழிவறையில் சடலமாக மீட்பு

கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்கை பிரிவில், 5ம் தேதி இரவு பணியில் இருந்தார். நேற்று காலை அவர். மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்ததை பார்த்த ஊழியர்கள், பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
News July 7, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன ரோந்து போலீசார் விபரம் !

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 6 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி (9443833538) ராசிபுரம் – ( 9498169110), பள்ளிபாளையம்- ( 9498110876), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – கலைச்செல்வன் ( 9952424705), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
News July 6, 2025
நாமக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 6) நாமக்கல்- கபிலன் ( 9711043610), ராசிபுரம்- அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு தவமணி – (9443736199), வேலூர் – தேவி ( 9842788031), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.