News November 27, 2025
திருச்சி: 6 நாட்களுக்கு தடை விதிப்பு

வையம்பட்டி அடுத்த வீரமலைபாளையம் குண்டு சுடும் பயிற்சி தளத்தில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தலைமையிடமாக கொண்ட இந்தோ-திபெத் ராணுவ வீரர்கள் வரும் நவ.,27-ம் தேதி முதல் டிச.,2-ம் தேதி வரை குண்டு சுடும் பயிற்சி செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் வீரமலைபாளையம் பகுதியில் நாளை முதல் 6 நாட்களுக்கு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 29, 2025
திருச்சி: பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413510 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
திருச்சி: பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413510 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
திருச்சி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.29) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


