News February 9, 2026

திருச்சி: 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் !

image

நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த திருச்சி மாநகர போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது வசந்தகுமார் தன் உடலில் கஞ்சாவை மறைத்து வைத்து, அதனை மீண்டும் சிறைக்குள் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கைதி காவலில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் 4 பேரை திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Similar News

News February 9, 2026

திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News February 9, 2026

திருச்சி: தீப்பிடித்து வீடு எரிந்து நாசம்

image

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் முத்துராஜா தெருவில் வசித்து வரும் கிருஷ்ணவேணி (70) என்ற மூதாட்டி அடுப்படியில் வைத்த எண்ணெய் பாக்கெட் வெப்பத்தால் தீப்பிடித்தது. அவர் அணைக்க முயன்று தண்ணீரை ஊற்றியதால் தீ கூரைக்கு பரவி வீடு எரிந்தது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். மூதாட்டி காயமின்றி தப்பினார். இதில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 9, 2026

திருச்சி: தீயில் எரிந்து நாசமாகிய பேருந்து

image

சமயபுரம் அருகே அகிலாண்டபுரத்தில் தனியார் ஒர்க் ஷாப் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பேருந்து மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.

error: Content is protected !!