News October 14, 2025
திருச்சி: 2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு

சோமரசம்பேட்டையை சேர்ந்த சங்கர்-மனோன்மணி (30) தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோன்மணி நேற்று தனது தாயார் ரோகிணிக்கு போன் செய்து தன் மாமனார், மாமியார் இருவரும் பிரச்சனையில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து ரோகிணி தனது மகளை காண சென்றபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக சங்கர் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
திருச்சி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வையம்பட்டி அடுத்த தண்டல்காரனூர் அருகே நேற்று இரவு இடையபட்டியைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் கேம் மூலமாக ஏற்பட்ட பண இழப்பின் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அவர் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 14, 2025
திருச்சி: புகையிலையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டத்தில், “புகையிலை இல்லா இளைய சமுதாயம்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு முகாம் கடந்த 9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புகையிலையின் தீமைகள் குறித்து ஒவ்வொரு கிராமத்திலும் வாரத்தில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரம் இருமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
திருச்சி போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை!

திருச்சி இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடம்: திருச்சி
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. சம்பளம்: ரூ.30,000
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <