News February 1, 2026

திருச்சி: வேன் கவிழ்ந்து விபத்து – 14 பேர் காயம்

image

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் உமையாள்புரம் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து நேற்று இரவு கவிழ்ந்தது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆன்மீகப் பயணம் முடிந்து திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டது. இதில் வேனில் பயணித்த 14 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 2, 2026

திருச்சி: சம்பவ இடத்திலேயே கணவன்-மனைவி பலி

image

திருச்சி, துவாக்குடி பெல் நகர் கலைஞர் தெருவை சேர்ந்த தம்பதி குணசேகரன் (59) – லட்சுமி (55). இவர்கள் இருவரும் நேற்று துவாக்குடி செல்வதற்காக பெல் நகர் பகுதியில் இருந்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் திரும்பிய போது வேதாரண்யத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பெல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 1, 2026

திருச்சி: பொதுமக்கள் நடமாட தடை – ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் பிப்.2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை, துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 1, 2026

திருச்சி: வாக்காளர் பட்டியல் குறித்த அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த 19.12.25 முதல் 30.01.26 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், மொத்தம் 1,37,308 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் பரிசீலனை செய்து, வரும் 10-ம் தேதிக்குள் இறுதி முடிவு செய்வார்கள். பின்னர் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!