News April 27, 2024

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

image

முக்கிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீவிர சோதனை நடந்து வரும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 16, 2026

திருச்சி: டிராக்டர் மோதி கல்லூரி மாணவி பலி

image

மண்ணச்சநல்லூர் அடுத்த அய்யம்பாளையம் தரகுகாரன்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நமீதா. இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை தனது தாயாருடன் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, நாடார்பள்ளம் பகுதியில் டிராக்டர் மோதியது. அதில் நமீதா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரது தாயாரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News February 16, 2026

திருச்சி: நாயால் பறிபோன உயிர்

image

கரூர், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் அமிர்தம் (44). அங்கன்வாடி சமையலரான இவர் சம்பவத்தன்று டூவீலரில் சென்று கொண்டிருந்த போது கருங்குளம் என்ற இடத்தில் நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 15, 2026

திருச்சி: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!