News January 29, 2026
திருச்சி: வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில், இரண்டு இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் https://nrcb.org.in/nrcbadmin/webfs/vacancy/No_1_Recruitment_notice.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் பிப்.13ஆம் தேதிக்குள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
திருச்சி: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 2, 2026
திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் அதவத்தூர், சிறுகனூர் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, வாசன் நகர், குழுமணி, வயலூர், சோமரசம்பேட்டை, புலியூர், போதாவூர், சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், வாழையூர், குமுளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 2, 2026
திருச்சி: சம்பவ இடத்திலேயே கணவன்-மனைவி பலி

திருச்சி, துவாக்குடி பெல் நகர் கலைஞர் தெருவை சேர்ந்த தம்பதி குணசேகரன் (59) – லட்சுமி (55). இவர்கள் இருவரும் நேற்று துவாக்குடி செல்வதற்காக பெல் நகர் பகுதியில் இருந்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் திரும்பிய போது வேதாரண்யத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பெல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


