News September 8, 2025
திருச்சி: வாழவந்தி அரவண்காடு அருகே பெண் பலி

முசிறி அருகே சிந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி அம்மாள் (45) இவர் இன்று காலையில் தனது மொபட்டில் முசிறி துறையூர சாலையில் வாளவந்தி அரவங்காடு அருகே வந்தபோது எந்தவித செய்கையும் காட்டாமல் திரும்பி உள்ளார். அப்போது குளித்தலை உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார் (24) ஓட்டி வந்த கார் மொபட் மீது மோதியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.
Similar News
News September 8, 2025
திருச்சி: தபால் சேவை முக்கிய அப்டேட்

இந்திய அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் வரும் செப்.,24-ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நேரிலோ அல்லது வலை செயலிகள் மூலமாகவோ பங்கேற்கலாம். தபால் மூலம் குறைகளை தெரிவிப்போர் தலைமை தபால் நிலைய அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்திற்கு தபால்களை அனுப்ப வேண்டும் என திருச்சி மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
திருச்சி: சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க கோரிக்கை

திருச்சி – தாம்பரம் இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன. இதனால், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் கிடைக்காத பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே இந்த சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டுமென ரயில் பயணிகள் சங்கத்தினர் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 8, 2025
திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருச்சி மக்களே இதற்கு விண்ணபிக்க <