News January 3, 2026
திருச்சி: வலிப்பு நோயால் ஏற்பட்ட விபரீதம்!

முசிறி தண்டலை பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (33). இவர் வலிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று தண்டலை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் அவர் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது தண்ணீரில் மயங்கி விழுந்த அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 27, 2026
ரூ.1139 கோடி வருவாய்: திருச்சி கோட்ட ரயில்வே சாதனை

திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நடப்பு நிதி ஆண்டில் (01.04.2025 – 31.12.2025) ரூ.1139 கோடி மொத்த வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. மேலும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் 68 குற்றவாளிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. பயணிகளை கையாள்வதில் தொடர்ந்து தரமான சேவைகளை கோட்ட ரயில்வே நிர்வாகம் வழங்கி வருவதாக, கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
திருச்சி: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News January 27, 2026
திருச்சி: கேஸ் மானியம் வரவில்லையா? இதை செய்யுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.


