News October 8, 2025
திருச்சி: வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு

திருச்சி பொன்மலை ரயில் நிலையம் வழியாக கடந்த 27ஆம் தேதி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தாக்குதலில் ஈடுபட்டது திருச்சியை சேர்ந்த தேன்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் தேன்ராஜை நேற்று கைது செய்தனர்.
Similar News
News October 8, 2025
திருச்சி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. ஆரம்ப தேதி: 21.10.2025
6. கடைசி தேதி: 20.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 8, 2025
திருச்சி – ராமேஸ்வரம் ரயில் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது இன்று (அக்.8) மற்றும் அக்.9, 10, 13 ஆகிய தேதிகளில் மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 8, 2025
திருச்சி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!