News April 17, 2025

திருச்சி: ரூ.56,000 சம்பளத்தில் வேலை?

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <><>tnpsc.gov.in<<>><<>> என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

Similar News

News August 9, 2025

திருச்சியில் சிறப்பு குறைதீர் முகாம்கள்

image

திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களில் சனிக்கிழமை (10.08.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல்,திருத்தங்கள், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் என அந்தந்த பகுதிக்குரிய கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் முகாம்கள் நடைபெறும்..

News August 8, 2025

திருச்சி: ஆடி மாதம், கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க !

image

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்

செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்

போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!

News August 8, 2025

திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூ.86 லட்சம் அபராதம் வசூல்

image

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் டிக்கெட் இன்றி பயணம் செய்தது, முன் பதிவு இல்லா டிக்கெட் வைத்துக் கொண்டு உயர்தர வகுப்புகளில் பயணம் செய்தது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக லக்கேஜ் எடுத்து செல்வது உள்ளிட்ட வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17,065 பயணிகளிடம் இருந்து ரூ.86,30,076 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!