News December 16, 2025
திருச்சி: ரயில் மோதி பரிதாப பலி

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
திருச்சி: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு, இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


