News October 26, 2025
திருச்சி ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து மோப்பநாய் உதவியுடன் இன்று ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நடைமேடைகள், வாகன நிறுத்துமிடம், பார்சல் அலுவலகம் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாச வேலைகளை தடுக்கும் வகையிலும், போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News January 29, 2026
திருச்சி: அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம் வளநாட்டைச் சேர்ந்தவர் வளையல் வியாபாரியான ராமு. இவர் நேற்று பொன்னக்கோன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்புக்கு சென்று வளையல் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது கல்லாமேடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 29, 2026
திருச்சி: டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FLFL3AA & FL11 ஆகிய ஹோட்டல் பற்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 29, 2026
திருச்சி: டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FLFL3AA & FL11 ஆகிய ஹோட்டல் பற்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


