News October 28, 2024

திருச்சி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்

image

தமிழகம் முழுவதும் வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சொந்த ஊருக்கு செல்வோர் காரணமாக ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் திருச்சி ரயில் நிலையங்களில் தமிழக ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து திருட்டு உள்ளிட்ட குற்றத் தடுப்புப் பணிகளுக்காக சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 11, 2026

ஶ்ரீரங்கம்: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

image

திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழாவின்போது, கோவில் தேர் பட்டியலின மக்கள் வாழும் தெருக்களுக்கு வருவதில்லை, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருச்சியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக திருச்சி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

News February 11, 2026

திருச்சி மாவட்ட அரசு துறையில் வேலை!

image

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள, 6 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tiruchirappalli.nic.in என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு நேரடியாகவோ அல்லது தபால் வழியாகவோ வரும் 16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2026

திருச்சி: மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டி அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில், மாவட்ட அளவிலான ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள், வரும் 14ஆம் தேதி, அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. சப் ஜூனியர், ஜூனியர், யூத் ஆகிய பிரிவுகளுக்கான போட்டியில் பள்ளி மாணவர்கள், குறிப்பிட்ட வயது பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம் என குத்து சண்டை கழகத்தின் செயலாளர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!