News October 18, 2024
திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி

காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இப்போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
Similar News
News August 17, 2025
திருச்சி: திடீர் மின்தடையா ? உடனே கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News August 17, 2025
திருச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வருகிற 31ம் தேதி ஜமால் முகமது கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற, 18 – 35 வயதுக்குட்பட்டவர்கள் கல்வி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் பங்கேற்கலாம்.
News August 17, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் முசிறி, தண்டலைப்புதூர், தும்பலம், மணமேடு, எடமலைப்பட்டி புதூர், மன்னார்புரம், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜாமலை, மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE !