News September 16, 2025
திருச்சி: மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக மோசடி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக OTP, கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். செல்போனுக்கு வரும் சந்தேகத்திற்குரிய அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம். குறுஞ்செய்திகள் மூலமாகவோ, வாட்ஸ்ஆப் மூலமாக வரும் தெரியாத லிங்குகளை தொடவேண்டாம் என திருச்சி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 16, 2025
திருச்சி: கஞ்சா விற்றவர்கள் அதிரடி கைது

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மெய்யப்பன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .இதேபோல துவரங்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அழகேஸ்வரன், சுபாஷ், கரன், நவநீதகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என திருச்சி மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான செப்டம்பர் மாத குறைதீர் கூட்டம் வரும் செப்.,19ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர் பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
திருச்சி: கடன் தொல்லை நீக்கும் முருகன்

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.