News February 12, 2026

திருச்சி: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

image

திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழாவின்போது, கோவில் தேர் பட்டியலின மக்கள் வாழும் தெருக்களுக்கு வருவதில்லை, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருச்சியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக திருச்சி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Similar News

News February 17, 2026

திருச்சி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News February 17, 2026

திருச்சி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News February 17, 2026

துவாக்குடி: சர்வீஸ் சாலை குறித்த அறிவிப்பு

image

திருச்சி, பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை 14.5 கி.மீ நீளத்திற்கு, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சர்வீஸ் சாலை அமைக்கும் பணிக்காக 9 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. மேலும் 7 கிராமங்களில் நிலம் எடுப்பு பணி முடிக்கப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!