News March 26, 2024

திருச்சி மாவட்டத்தில் 33,809 பேர் 10 வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில் திருச்சி மாவட்டத்தில் 16,983 மாணவர்களும், 16,826 மாணவிகளும் என மொத்தம் 33,809 பேர் தேர்வு எழுதுகின்றனர். 169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 63பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மத்திய சிறைச்சாலையை சிறு கைதிகள் 9 பேர் 10வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். 

Similar News

News January 22, 2026

திருச்சி – புது ஜல்பைகுரி அதிவிரைவு ரயில் விவரம்!

image

திருச்சி – புது ஜல்பைகுரி (மேற்குவங்கம்) அதிவிரைவு ரயிலானது (20610) வரும் 28 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 22 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு தஞ்சை, சென்னை எழும்பூா், விஜயவாடா, விசாகப்பட்டினம், கோரக்பூா், அந்தூல், டங்குரி, போல்பூா் வழியாக புது ஜல்பைகுரிக்கு வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 22, 2026

திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் ரத்து

image

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து நாள் தோறும் பகல் 1 மணிக்கு புறப்படும், திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக வரும் 27ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கரூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு சென்றடையும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

திருச்சி: பயணிகள் ரயில் ரத்து

image

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – கரூர் பயணிகள் ரயில் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – கரூர் பயணிகள் ரயிலானது (76809) வரும் ஜன.27ஆம் தேதி ஒரு நாள் மட்டும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே பயணிகள் தங்களது பயணத்திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!