News April 7, 2026
திருச்சி மாவட்டத்தில் ரூ.1.32 கோடி பறிமுதல்

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஏப்.6) மாலை வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,32,30,285 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.64,62,835 விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2026
திருச்சி: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை – APPLY NOW!

திருச்சி மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <
News April 10, 2026
திருச்சி மாவட்டத்தில் 171 வேட்பாளர்கள் போட்டி!

சட்டசபைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் நேற்று (09.04.2026) மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 171 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக திருவெறும்பூர் தொகுதியில் 26 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக முசிறி தொகுதியில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
News April 10, 2026
திருச்சி: 2 இளைஞரகள் மீது பாய்ந்த குண்டாஸ்

திருவெறும்பூர் அருகே பாலாஜி என்பவர் அவரது நண்பர்களை பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது, கோபால், ராஜாமுகமது ஆகியோர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பண, பறித்து சென்றனர். இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் கைது செய்தனர்.இந்நிலையில் இருவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் நேற்று உத்திரவிட்டார்.


