News December 25, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், பிடாரமங்கலம், சீலைப்பிள்ளையார்புதூர், நாகையநல்லூர், சின்னப்பள்ளிபாளையம், பெரியப்பள்ளிபாளையம், பெரியநாயக்கன்பட்டி, புதுப்பாளையம், சீதப்பட்டி, கேசரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Similar News
News December 26, 2025
திருச்சி: லாரி கவிழ்ந்து விபத்து; 11 பேர் காயம்

தொட்டியம் அருகே சீத்தப்பட்டி பகுதியில் இருந்து மரவள்ளிக் கிழங்குகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று நாமக்கல் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியில் ஏற்றப்பட்ட கிழங்குகள் மீது 11 தொழிலாளர்கள் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் காட்டுப்புத்தூர் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், வெளியே அமர்ந்திருந்த 11 பேர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
News December 26, 2025
ஸ்ரீரங்கம்: ஆண்டாள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில், பாவை நோன்பின் 10-ம் நாளான இன்று காலை நாற்றத்துழாய்முடி நாராயணன் கோளத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
News December 26, 2025
ஸ்ரீரங்கம்: ஆண்டாள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில், பாவை நோன்பின் 10-ம் நாளான இன்று காலை நாற்றத்துழாய்முடி நாராயணன் கோளத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


