News March 29, 2025
திருச்சி மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

திருச்சி அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட தென்னூர், லால்குடி, ராஜாஜி நகர் அஞ்சலகங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, 3 அஞ்சலகங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் ஏப்.1-ம் தேதி முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என திருச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
Similar News
News January 27, 2026
திருச்சி: திருமண தடை நீக்கும் அம்மன்!

திருச்சி மாவட்டம் பொன்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற பொன்னேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பால் கிணற்றில் நீராடி அன்னைக்கு அபிஷேகம் செய்தால் திருமண தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இக்கோயிலுக்கு சென்றது உண்டா ? மேலும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE செய்யவும்!
News January 27, 2026
திருச்சி: 131 கம்பெனிகள் மீது நடவடிக்கை

குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 178 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 131 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
திருச்சி: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

திருச்சி மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <


