News September 14, 2025
திருச்சி: மாணவியிடம் ஆபாச பேச்சு; அதிரடி கைது

திருச்சி மாவட்டம் , முசிறி அரசு கலை கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர் நாகராஜ் (47) என்பவர் 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உதவி பேராசிரியர் நாகராஜ் மீது முசிறி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 14, 2025
திருச்சி: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

திருச்சி மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
News September 14, 2025
திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 19 நான்கு சக்கர வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே வரும் செப்.,19-ம் தேதி காலை 10 மணிக்கு, திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் ரூ.5000 முன் பணம் செலுத்தி வரும் 19-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலம், உரிய ஆவணங்களுடன் வரும் அக்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.