News March 25, 2024
திருச்சி மதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரதீப் குமாரிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News September 19, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 1999 மனுக்கள்

திருச்சியில் இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 1999 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கைலாசபுரத்தில் 196, மணிகண்டத்தில் 180, கல்லக்குடியில் 361, அதவத்தூரில் 186, லால்குடியில் 480, நடுப்பட்டியில் 464, தா.பேட்டையில் 334, எரகுடியில் 458 மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
News September 19, 2025
திருச்சி: ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலைய நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, மது பாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
News September 18, 2025
திருச்சி: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

திருச்சி மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅துறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
✅பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
✅கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
✅சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 30.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..