News August 19, 2025

திருச்சி: மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 50,000 முதல் 70,000 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகையால் திருச்சி மாவட்டத்தில் கம்பரசம்பேட்டை, மேலூர் உள்ளிட்ட காவிரி கொள்ளிட கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சலவை தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

திருச்சி: வேலை மோசடி; காவல்துறை எச்சரிக்கை

image

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் வெளிநாட்டு வேலை மோசடிகளில் சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர்களை மட்டும் பயன்படுத்தவும், பதிவு செய்யப்பட்ட Protector of Emigrants (POE) முகவர்களிடம் வழங்கிய உரிம எண் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 6, 2026

திருச்சி மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

image

திருச்சி மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 6, 2026

திருச்சி: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

திருச்சி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!