News December 26, 2025

திருச்சி: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை

image

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு, அவரது தந்தையே தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், சிறுமியின் தந்தை கடந்த மாதம் 27-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சிறுமியின் தந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Similar News

News December 26, 2025

டிரைவர் வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள ஒரு ஓட்டுநர் பணி நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியமாக ரூ.13,500 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள, மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 26, 2025

திருச்சி: லாரி கவிழ்ந்து விபத்து; 11 பேர் காயம்

image

தொட்டியம் அருகே சீத்தப்பட்டி பகுதியில் இருந்து மரவள்ளிக் கிழங்குகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று நாமக்கல் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியில் ஏற்றப்பட்ட கிழங்குகள் மீது 11 தொழிலாளர்கள் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் காட்டுப்புத்தூர் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், வெளியே அமர்ந்திருந்த 11 பேர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

News December 26, 2025

ஸ்ரீரங்கம்: ஆண்டாள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரம்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில், பாவை நோன்பின் 10-ம் நாளான இன்று காலை நாற்றத்துழாய்முடி நாராயணன் கோளத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!