News January 10, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு முக்கிய அறிவிப்பு

திருச்சி துறையூரை சேர்ந்த அப்பாதுரை என்பவர் “ஸ்ரீ மாரியம்மன் சிட்ஃபண்ட்ஸ்” என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே மேற்கண்ட சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 3, 2026
திருச்சி: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News February 3, 2026
திருச்சி: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News February 3, 2026
திருச்சி: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி நம்பர்-1 டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்லும் சாலையில், மேலவாளாடி பகுதியில் லால்குடி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த அரசு பேருந்து இன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நம்பர்1 டோல்கேட் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


