News July 9, 2025
திருச்சி: பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் எஸ்பி செ.செல்வநாகரத்தினம் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (09.07.2025) நடைபெற்றது. இதில் மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து 30மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News July 9, 2025
ஶ்ரீரங்கத்தில் குடிநீர் விநியோகம் தடை

ஶ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் ஜூலை 10ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் , ஜே.கே. நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்காநகர், சுப்ரமணிய நகர் புதியது, குடிநீர் வினியோகம் 11.07.2025 அன்று இருக்காதென மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார் .
News July 9, 2025
திருச்சி விமான நிலையில் வேலை! Apply பண்ணுங்க!

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள்<
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (1/2)

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே <