News November 14, 2025
திருச்சி: பெல் நிறுவன எழுத்துத் தேர்வு ரத்து!

திருவெறும்பூர் அடுத்து மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் ஆர்ட்டிஷன் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அதற்கான எழுத்துத் தேர்வானது கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நடைபெற்ற எழுத்து தேர்வில் மொழி பிரச்சனை இருந்ததால், அந்த எழுத்து தேர்வை பெல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதற்கான மறுதேர்வு பின்னர் தெரிவிக்கப்படும் என்று பெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 14, 2025
திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

வெளிநாட்டில் வேலை என ஆசை வார்த்தைகள் கூறும் போலி முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் Protector of Emigrants (POE) வழங்கிய உரிம எண் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும், வெளிநாட்டு வேலை மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்க 8939146100 என்ற எண்ணை அழைக்கலாம் தெரிவித்துள்ளனர்.
News November 14, 2025
திருச்சி: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
திருச்சி: நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, கொப்பம்பட்டி, எடமலைப்பட்டி புதூர், திருச்சி, மன்னார்புரம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (நவ.15) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக முசிறி, உப்பிலியபுரம், நாரசிங்கபுரம், சொக்கலிங்கபுரம், ஜாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்!


