News November 5, 2025

திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 5, 2025

திருச்சி பெண் கொலை: ஆயுள் தண்டனை உறுதி

image

திருவெறும்பூரை சேர்ந்த முத்துலட்சுமி என்ற கொலை செய்யப்பட்ட வழக்கில், ரேவதி என்பவருக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இதனை ரத்து செய்யக்கோரி ரேவதி மதுரை நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொலை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர்.

News November 5, 2025

திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 10ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த விவரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

திருச்சி: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

image

தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 11 பேருக்கு பணியிட மாற்றமும், மாவட்ட கல்வி அலுவலர்கள் 26 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் நாகை மாவட்ட முதன்மை தொடக்க கல்வி அலுவலராகவும், திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் பேபி தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதலுடன் கூடிய பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

error: Content is protected !!