News October 14, 2025

திருச்சி: புதிய ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பதவி ஏற்பு

image

திருச்சி தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளராக விபின்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நாட்டின் பல்வேறு ரயில்வே மண்டலங்கள் மற்றும் உள்கட்டமைப்பு களங்களில் 1988ம் ஆண்டு முதல் சிறப்பாக பணியாற்றி வந்த விபின்குமார், சிறப்பான நிர்வாகத்தை மேற்கொள்வார் என தெற்கு ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 13, 2025

திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் பட்டியல் இன மக்களுக்கான சலுகைகளை பெறுவதற்காக, போலியான ஆவணங்களை தயாரித்து, அதை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டதாக அவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்த விசாரணை இன்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் ஜெயந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

News October 13, 2025

திருச்சி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்கலாம். SHARE !!

News October 13, 2025

திருச்சி: கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு

image

தில்லை நகரைச் சேர்ந்த சுதர்சன் நேற்று முன்தினம் திருவெறும்பூர் சென்று விட்டு தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி சிலைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விசாரித்த தில்லைநகர் போலீசார் நகைகள் திருடிய விஜயராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.

error: Content is protected !!