News March 4, 2026
திருச்சி: பாலியல் வன்கொடுமை வழக்கு – நீதிமன்றம் அதிரடி

துறையூர், ஜம்புநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (32) என்பவர் முட்புதருக்குள் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இவ்வழக்கில் பெருமாள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி பெருமாளுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6000 அபராதம் விதித்து நீதிபதி சண்முகப்பிரியா தீர்ப்பளித்தார்.
Similar News
News March 4, 2026
ஹிந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்

திருச்சி தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் கர்தவ்ய த்வார் என எழுதி உள்ளனர். இதனை கண்டித்து ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தனர்.
News March 4, 2026
திருச்சி: E-சேவை மையம் தொடங்க அரிய வாய்ப்பு!

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News March 4, 2026
திருச்சி: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


