News October 22, 2025
திருச்சி: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

வங்கக்கடலில் உருவாங்கியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க!
Similar News
News October 22, 2025
திருச்சி அருகே சோகம்: மின்னல் தாக்கி பலி

திருச்சி மாவட்டம், இருங்களூர் ஊராட்சி புறத்தாக்குடி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் இரண்டு காளை மாடுகளை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் எதிர்பாராத விதமாக காளைகள் மீது மின்னல் தாக்கியதில், 2 காளைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 22, 2025
திருச்சி: அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு திரும்ப பொதுமக்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதியினை, போக்குவரத்துறை அமைச்சர் ச.சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வுமேற்கொண்டார்.
News October 21, 2025
திருச்சி: ரயில்வே கோட்ட மேலாளர் அறிவிப்பு

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் பாலக்ராம் நெகி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருச்சி கோட்டத்தில் அக்.1ம் தேதி முதல் இன்று வரை 116 ரயில் இயக்கப்பட்டு, மொத்தம் 21,68,395 பயணிகள் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்யப்படாத பிரிவில் 16,63,296 பயணிகளும் முன்பதிவு செய்யப்பட்ட பிரிவில் 5,05,099 பயணிகளும் பயணம் செய்துள்ளதாக’’ தெரிவித்தார் அவர்.