News August 5, 2025

திருச்சி: பயிர் காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கு குருவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 20, 2025

திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா?

image

திருச்சி மக்களே..! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனில் ஈஸியா டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். <>இந்த லிங்கில் சென்று <<>>உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.<<17466079>> பாகம் 2 <<>>

News August 20, 2025

திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? 2/2

image

▶️ வருமான சான்று, ▶️ சாதி சான்று, ▶️ இருப்பிடச் சான்று, ▶️ கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, ▶️ முதல் பட்டதாரி சான்று, ▶️ வருமான சான்றிதழ், ▶️ வாரிசு சான்றிதழ், ▶️ குடிபெயர்வு சான்றிதழ், ▶️ சிறு/குறு விவசாயி சான்றிதழ், ▶️ கலப்பு திருமண சான்றிதழ், ▶️ சொத்து மதிப்பு சான்றிதழ், ▶️ விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழ் உள்ளிட்டவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News August 20, 2025

திருச்சி: அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு

image

மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில் அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற, நிலத்தின் ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குனரை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!