News January 11, 2026
திருச்சி: பயிர் கணக்கெடுப்பு பணிக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் ராபி பருவத்திற்கு மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியினை மேலும் விரைந்து முடித்திட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே கிராமப்புறங்களில் உள்ள ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்தும் விருப்பமுள்ள ஆண், பெண் தன்னார்வலர்கள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
திருச்சி: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<
News February 6, 2026
திருச்சி – சென்னை கூடுதல் விமான சேவை அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு 6 விமான சேவைகளை வழங்கி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், நிர்வாக காரணங்களுக்காக விமான சேவைகளை இரண்டாக குறைத்தது. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு சிறிய ரக விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறிய ரக விமானம் திருச்சியில் இருந்து பிற்பகல் 2:55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
திருச்சி: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ஜங்சன் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரண்டு தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.


