News March 14, 2025
திருச்சி: தொழிலதிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

திருச்சி, அரியமங்கலம் பெரியார் தெரு அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்ராஜ்(64) கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததில், பொன்ராஜ் மருமகளுக்கும், நிஷாந்த்(27) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததை பொன்ராஜ் கண்டித்ததால் அவரை நிஷாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரசன்னா(20), குணசேகர்(21) ஆகியோர் தாக்கியுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News March 3, 2026
திருச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருச்சியை சேர்ந்த, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எஸ்.சி, எஸ்.டி மாணவர்களிடம் இருந்து, ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 25-ம் தேதி கடைசி நாளாகும். இது குறித்த விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
திருச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்!

தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டியில், குடும்பப் பிரச்சனை காரணமாக லாவண்யா (26) என்ற பெண்ணை அவரது கணவர் பொன்னர் (29) அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த லாவண்யாவின் உறவினர்கள் சரண்யா மற்றும் கன்னியம்மாள் ஆகியோரையும் அவர் தாக்கியுள்ளார். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொட்டியம் போலீசார், பொன்னாரை கைது செய்தனர்.


