News January 1, 2026
திருச்சி: தேள் கடித்து சிறுவன் பலி

கீழப்பட்டியை சேர்ந்தவர் சர்வந்த் (8). 3-ம் வகுப்பு படித்து வந்த சர்வந்த் விளையாடிக் கொண்டிருந்தபோது தேள் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து சிறுவனை மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 6, 2026
திருச்சி: ரூ.3 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 6, 2026
திருச்சியில் லாரி மோதி தொழிலாளி பலி

திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி சிலை அருகே தோளில் சுமை ஏற்றி சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது, அவ்வழியாக வந்த பொக்லைன் லாரி இன்று (ஜன.6) மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய காந்தி மார்க்கெட் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
திருச்சி: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

மத்திய, மாநில அரசின் உதவியோடு இலவசமாக மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-ம், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. <<18777134>>(பாகம்-2)<<>>


