News January 15, 2026
திருச்சி: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

திருச்சி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News February 4, 2026
திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 8:40 மணிக்கு புறப்படும், திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் பிப்.4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில், பொறியியல் பணிகள் காரணமாக திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அதவத்தூர், சோமரசம்பேட்டை, குழுமணி, மருவத்தூர், நரசிங்கபுரம், டி.ரெங்கநாதபுரம், செங்கட்டுப்பட்டி, உப்பிலியபுரம், கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 4, 2026
திருச்சி: கொலை குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனக்கால் பகுதியில் வசித்து வரும் ரவீந்திரகுமார் என்பவரை கமலேஷ் என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் கமலேஷை கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் கமலேசின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, நேற்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


