News September 13, 2025

திருச்சி: திட்ட முகாமில் 1556 மனுக்கள் பதிவு

image

திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (செப்.12) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பெருவளநல்லூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் அதிகபட்சமாக 480 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் மணிகண்டம் ஒன்றியத்தில் 180, துறையூர் ஒன்றியத்தில் 213, திருவெறும்பூர் ஒன்றியத்தில் 257 மனுக்கள் என மொத்தம் 1556 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 13, 2025

திருச்சி: ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சியில் அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் அக்.10 ஆம் தேதி, ஆட்சியர் அலுவலகதில் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பிய நபர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

திருச்சி: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

image

திருச்சி ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் என மொத்தம் 57 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து செப்.,22-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். SHARE பண்ணுங்க.

News September 12, 2025

திருச்சி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி மற்றும் திருச்சி வழி ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ராக்போர்ட், பாண்டியன், சோழன் விரைவு ரயில்கள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!