News January 21, 2026
திருச்சி: தண்டவாளத்தில் தலை துண்டித்து பலி

மணப்பாறை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தண்டவாளத்தின் குறுக்கே தலையை வைத்து படுத்துள்ளார். அப்போது ரயில் நிலையத்தில் நின்று புறப்பட்ட ரயில் ஏறியதில், தலை துண்டித்து, பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News January 24, 2026
திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

குடியரசு தின விழா கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது இன்று (ஜன.24) இரவு 11:50 மணிக்கு, 23 பெட்டிகளுடன் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக நாளை (ஜன.25) காலை 11:40 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 24, 2026
திருச்சி: பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த முதாட்டி

மணப்பாறை பேருந்து நிலையத்தில் தங்கி, சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக யாசகம் பெற்று வந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 24, 2026
தென்னக ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

குடியரசு தினம் முதல் சோழன் விரைவு வண்டி(Sl no: 104,105) திருவெறும்பூரில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்தாண்டு நிறைவேறியுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட திருச்சி எம் பி துரை வைகோவுக்கு திருச்சி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.


