News September 23, 2025
திருச்சி: தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடக்கம்

இந்திய அரசின் ஸ்கில் இந்தியா, என்.எஸ்.டி.சி சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, திருச்சி மேலப்புலி வார்டு ரோட்டில் உள்ள சித்தாந்த சபா பயிற்சி நிலையத்தில் இன்று (செப்.22) தொடங்கி அக்.4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். மேலும் விவரங்களுக்கு 94473 28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
அமைச்சர் மாவட்டத்தில் இப்படியா?: அண்ணாமலை அறிக்கை

துறையூர், சிங்களாந்தபுரத்தில் இன்று பள்ளியின் மேற்கூரை கட்டடம் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக பள்ளி துவங்கும் முன்பு இந்த அசம்பாவிதம் நடந்ததால், குழந்தைகள் உயிர் தப்பினர். அமைச்சர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது, வேதனை அளிக்கிறது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் உரிய விளக்கம் தர வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அவரது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News September 22, 2025
திருச்சி மக்களே உள்ளூரில் அரசு வேலை

திருச்சி மக்களே..! IIM Trichy-யில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
✅நிறுவனம்: Indian Institute of Management Tiruchirappalli
✅பணி: பல்வேறு
✅கல்வி தகுதி: டிகிரி மற்றும் பணிக்கேற்ப
✅சம்பளம்: ரூ.25,500 –ரூ.1,42,400
✅மேலும் விவரங்களுக்கு: <
✅கடைசி தேதி: 21.10.2025
✅ வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
News September 22, 2025
திருச்சி: நவராத்திரியில் கட்டாயம் செல்ல வேண்டிய கோவில்

லால்குடி தாலுகா, ஊட்டத்தூரில் பிரசித்தி பெற்ற சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் துர்க்கை வித்தியாசமாக கோரைப் பற்கள் வெளியே தெரியுமாறு காட்சி தருகிறார். இங்குள்ள அம்மனுக்கு நவராத்திரி தினத்தன்று எலுமிச்சை மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், பெண்களுக்கு திருமண வரன் உடனடியாக கைகூடும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!