News April 25, 2025

திருச்சி: டிகிரி முடித்தவர்க்ளுக்கு வேலை?

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 காலி எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுத படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3 க்குள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News December 11, 2025

திருச்சி கலெக்டர் சரவணன் அறிவிப்பு

image

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது தமிழக முதலமைச்சரால் “கபீர் புரஸ்கார்” விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை http://awards.tn.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

திருச்சி: ஆசிரியர் தற்கொலை!

image

திருச்சி கிராப்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் சார்லஸ் (50). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தால், மனமுடைந்த சார்லஸ் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 11, 2025

திருச்சி: பஸ்சில் இருந்து கீழே விழுந்து சாவு

image

புள்ளம்பாடி அடுத்த ஆலம்பாக்கத்தை சேர்ந்தவர் விக்டர்ராஜ் (31). இவர் அரியலூர் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விக்டர்ராஜ் வேலை முடிந்து அரியலூரில் இருந்து புள்ளம்பாடிக்கு அரசு பஸ்சில் வந்துகொண்டிருந்தார். அப்போது புள்ளம்பாடி அருகே இறங்குவதற்காக படியில் நின்ற அவர் மீது டூவீலர் ஒன்று மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!